முகப்பு
செய்திகள்

சூர்யா - 47 படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை: ஜித்து மாதவன்

சூர்யா - 47 குறித்து....

Updated On : 28 ஜூன் 2026, 3:04 pm IST
பகிர்:

நடிகர் சூர்யாவின் 47-வது படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியுள்ளார்.

கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா - 47 ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ”இப்படத்தை எப்படி ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதனால்தான் முதல் போஸ்டர் கூட வெளியிடப்படவில்லை. மேலும், பெயரும் இன்னும் முடிவாகவில்லை” என படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments