FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கருப்பு திரைப்படத்திற்காக சூர்யா எடுத்த பெரிய ரிஸ்க்!

கருப்பு திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து பேசிய சூர்யா...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:04 pm IST
கருப்பு பட போஸ்டரில் சூர்யா - X
பகிர்:

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் கடன் சிக்கலைத் தீர்த்ததைக் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், அமோக வரவேற்பைப் பெற்றது.

இதனால், நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யாவுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், இப்படத்தின் 100 நாள் விழாவை விரைவில் கொண்டாட உள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பேட்டியொன்றில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து பேசிய நடிகர் சூர்யா, “கருப்பு திரைப்படம் வெளியாக வேண்டுமென்றால் மிகப்பெரிய தொகையைக் கடனாக அடைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அவ்வளவு தொகையைக் கொடுக்கும் நிலையில் அப்போதும் நானும் இல்லை. அந்த நேரத்தில் என் குடும்பம் அதற்கு ஆதரவாக இருந்தனர். படம் நஷ்டத்தைச் சந்தித்திருந்தால், அந்தக் கடனை அவர்களும் சுமந்திருக்க வேண்டும். அந்தச் சூழலில் ஜோதிகா உறுதுணையாக நின்றார்.” எனக் கூறியுள்ளார்.

Actor Suriya has spoken about resolving the debt issues related to the movie Karuppu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments