விடை பெற்றார், அன்புடன் பாக்யராஜ்!
பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது...
மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன் 27) திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்துள்ளது.
தொடர்ந்து, பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்து நூற்றுக்கணக்கான திரைப் பிரபலங்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு வந்தனர். முக்கியமாக, தமிழக முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
தமிழ் சினிமாவில் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குநரானவர் 28 திரைப்படங்களை இயக்கினார். இதில், சில திரைப்படங்கள் மற்ற மொழிகளில் இவராலேயே ரீமேக்கும் செய்யப்பட்டன. அதில், நடிகர் அமிதாப் பச்சனை வைத்து ஒரு கைதியின் டைரி (ஆக்ரி ராஸ்தா) என்கிற ஹிந்தி படத்தை இயக்கி அங்கும் வெற்றியைப் பெற்றார்.
இன்று அரசு மரியாதையுடன் பெசண்ட் நகர் கடற்கரைப் பகுதியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அன்புடன் உங்கள் கே. பாக்யராஜ் இனிமேல் சினிமாவில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
The mortal remains of the late director Bhagyaraj were cremated with state honors.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.