அரசு அலுவலர் இருவர் மீது ஆட்சியர் நடவடிக்கை
பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு இன்று விநியோகம் செய்யப்பட்ட 15 ஆயிரம் அழுகிய முட்டைகளையும் திரும்பப் பெற்று புதிய முட்டையை இன்று இரவுக்குள் விநியோகிக்குமாறு நாமக்கல்லை
பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு இன்று விநியோகம் செய்யப்பட்ட 15 ஆயிரம் அழுகிய முட்டைகளையும் திரும்பப் பெற்று புதிய முட்டையை இன்று இரவுக்குள் விநியோகிக்குமாறு நாமக்கல்லை சேர்ந்த சொர்ணபூமி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவிட்டார்.
அத்துடன் அழுகிய முட்டைகளை பள்ளிகள், சத்துணவு மையங்களுக்கு விநியோகித்தமைக்காக அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் அவர் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முட்டை விநியோகத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட மாதனூர் ஊராட்சி அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் பாலையா உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) சிவப்பிரகாசம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.