முகப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் நடவடிக்கை

குளித்தலை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூரில் உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் மற்றும் சட்ட கல்வியறிவு சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 29 ஜூன் 2013, 3:39 pm IST
பகிர்:

கல்குவாரிகள், செங்கல் சூளைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக் குழு எச்சரித்துள்ளது.

குளித்தலை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள ஆலத்தூரில் உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் மற்றும் சட்ட கல்வியறிவு சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் மனோகரன், வெள்ளைச்சாமி ஆகியோர் பேசுகையில், தோகைமலையில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக புகார்கள் பெறப்பட்டால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானமாகும்.தமிழக அரசு குழந்தைகளுக்கு இலவச கல்வியை அனைத்து நிலைகளிலும் அளித்து வருகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலம் கருதி தோகைமலையில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என பேசினர். முகாமில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.