முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி: கிடைப்பதில் சிரமம் இருந்தால் புகார் கூறலாம்

தமிழக அரசின் 2013- 14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரிசி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசாமி

Updated On : 12 மே 2013, 6:12 pm IST
பகிர்:

தமிழக முதல்வரின் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பெறுவதில் சிரமம் இருந்தால் 27662622 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம் என மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழக அரசின் 2013- 14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரிசி விலையை கட்டுப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டகசாலை, திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசாமி கூட்டுறவு பண்டக சாலை, பொதட்டூர்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை மற்றும் பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய இடங்களில் ஒரு கிலோ தரமான அரிசி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் அரிசி கிடைப்பதில் சிரமம் ஏதும் ஏற்பட்டால் 27662622 என்ற தொலைபேசி எண்ணில் புகார் கூறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.