தங்க நகைக்கு வட்டியில்லாமல் பணம் தருவதாக ரூ.30 கோடி நகை மோசடி
தங்கை நகைக்கு வட்டியில்லாமல் பணம் தருவதாக ரூ.30 கோடி நகைகளை மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரிடம்
தங்கை நகைக்கு வட்டியில்லாமல் பணம் தருவதாக ரூ.30 கோடி நகைகளை மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் ஒருவர் சென்னையில் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் 1350 சவரன் நகைகள் வாங்கிக் கொடுத்த சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிகளவு மாத்திரைகள் சாப்பிட்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் லப்பத்தெருவைச் சேர்ந்த சையத் அகமது மனைவி சுக்கிரியாபானு . இவர் புத்தூரைச் சேர்ந்த ராஜி என்பவரது மூலம் கும்பகோணம் இந்திராநகரைச் சேர்ந்த தமிமுன் அன்சாமி மனைவி பாத்திமா நாச்சியாரிடம் தொடர்பு ஏற்பட்டது. அப்போது 1 பவுன் நகைக்கு 50 நாட்களுக்கு ரூ.1500 வீதம் வட்டியில்லாமல் பணம் தருவதாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 1350 சவரன் நகைகளை சுக்கிரியாபானு சிதம்பரம் பகுதியில் உள்ளவர்களிடம் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாத்திமா நாச்சியார் புகார் எழுந்து சென்னை போலீஸில் சரணடைந்ததால் அதிரிச்சியுற்ற சிதம்பரத்தைச் சேர்ந்த சுக்கிரியாபானு வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிதிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.