சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சாவு
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் அகில்ராஜ் (21), பெருமுகை அருகே உள்ள பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.அகில்ராஜ் தனது நண்பருடன்
வேலூரில் சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் அகில்ராஜ் (21), பெருமுகை அருகே உள்ள பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.அகில்ராஜ் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேலூர் நோக்கி புறப்பட்டார். அலமேலுமங்காபுரம் அருகே வந்தபோது அரசு பஸ்ஸுக்காக ஒதுங்கியபோது, சாலையோர மணலில் சிக்கி கீழே விழுந்தார். அதில் பஸ்ஸில் அடிப்பட்டு அகில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த நண்பகர் விஜய் அமிர்தராஜ் பலத்த காமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சத்துவாச்சாரி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.