அண்ணாமலைப் பல்கலை. பட்டமேற்படிப்பு 11 அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் 11 அரசு மருத்துவர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் 11 அரசு மருத்துவர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி உயிர் வேதியியல்துறை முதுநிலை மருத்துவ மாணவர் மரு.தி.பாரிவளவன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதி முதல் 11 அரசு மருத்துவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திள் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வருகிறோம். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசே ஏற்று நடத்துகிறது. தமிழக மருத்துவக்கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் அரசு மருத்துவர்களுக்கு முழுச் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி கட்டணம் வருடத்திற்கு ரூ.2,70,000 முதல் ரூ.6, 20,000 வரை பல்வேறு மருத்துவப் பிரிவிற்கு ஏற்ப கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. இந்த கட்டணம், அரசு மருத்துக்கல்லூரி வருடாந்திர பயிற்சி கட்டணத்தை விட பல மடங்கும் அதிகமாகும். 11 அரசு மருத்துவர்களும் திருமணமாகி, குழந்தைகளுடன் உள்ளவர்கள். இவர்கள் பட்ட மேற்படிப்பு படித்து, தங்களது பணி ஓய்வுக்காலம் வரை அரசு மருத்துவப்பணியில் பணியாற்றுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களை விருப்பத்தின் பேரில் பொது சுகாதாரத்துறை பட்ட மேற்படிப்ப பயில அரசே, முழுச்சம்பளத்துடன் அனுப்பி வைக்கிறது. ஆனால் அண்ணாமலைப் பல்கலையில் அரசு சம்பளம் கிடைக்காமல் அவதியுறுகிறோம். எனவே தமிழக முதல்வர் தலையிட்டு 11 பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு சம்பளம் கிடைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் என கடிதத்தில் மாணவர் மரு.தி.பாரிவள்ளல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.