சிதம்பரத்திற்கு முதல்வர் வருகையொட்டி ஏற்பாடுகள் தீவிரம்! நடராஜர் கோயிலுக்கு வருவாரா?
சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜர் கோயிலுக்கு
சிதம்பரம் நகருக்கு தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீட்சிதர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜர் கோயிலுக்கு முதல்வர் வருவார் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
வருகிற மார்ச் 11-ம் தேதி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து வாக்கு கேட்டு கீழரதவீதியில் பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். சென்னையிலிருந்து அன்றைய தினம் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கி பொதுக்கூட்டம் மேடைக்கும் வருகிறார். கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை செல்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல வளாகத்தில் உள்ள ஹெலிபேடிலிருந்து அண்ணாமலைநகர், ரயில்வே மேம்பாலம், எஸ்.பி.கோயில், வேணுகோபால்பிள்ளைத்தெரு, போல்நாராயணன்தெரு உள்ளிட்ட சாலைகளில் புதிதாக தார்சாலை போடப்பட்டு வருகின்றன. மேலும் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர்களில் வர்ணம் பூசப்பட்டும், மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற இடங்களில் எரியாமல் இருந்த மின்விளக்குகள் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கோயிலுக்கு வருமாறு தீட்சிதர்கள் அழைப்பு: தமிழகஅரசு ஆட்சேபனை தெரிவிக்காததால், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், மகிழ்ச்சியில் உள்ள பொதுதீட்சிதர்கள் அண்மையில் சென்னை போயஸ் கார்டனுக்கு சென்று, தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் போது நடராஜர் கோயிலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் முதல்வர் நடராஜர் கோயிலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.