முகப்பு
தற்போதைய செய்திகள்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இதுவரை 10 சதவீதம் மட்டுமே வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இதுவரை 10 சதவீதம் மட்டுமே வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.

Updated On : 22 நவம்பர் 2016, 1:06 pm IST
பகிர்:

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இதுவரை 10 சதவீதம் மட்டுமே வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளது. 5 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் மூலம் பெறப்பட்டுள்ளது.

இதில் 3 ஆயிரத்து 6 கோடி ரூபாய் மீண்டும் ஏ.டிஎம்.களில் எடுக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நேரடியாக மாறப்பட்டுள்ளது. இந்த கணக்குகளை வைத்து பார்க்கும் போது 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிட வேண்டிய தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.