உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராம ஜென்மபூமிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் அயோத்தியில் ராம ராஜ்ஜியம் அமைக்க விருப்புவதாக தெரிவித்தார்.
மேலும் மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் நான் எனது கடமையை உணர்ந்துள்ளேன். மாநிலத்தின் ஒவொவொரு இடத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
அயோத்தியில் ராம் கத கேலி கேலரி, ராணி ஹோ மெமோரியல், பல்வேறு திட்டங்களுக்கு 7.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 7.04 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். சுக்ரீவ கோயிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடத்திலும் கலந்து கொண்டார்.