தற்போதைய செய்திகள்

நைஜீரியாவில் பிரசார பேரணியில் சிக்கி 14 பேர் பலி

DIN

நைஜீரியாவில் நடந்த தேர்தல் பிரசார வன்முறையில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.  

நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, வருகிற பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள பெரிய நாடான நைஜீரியாவில், 15 கோடி பேர் மேல் வசிக்கின்றனர். இதில் முகமது புஹாரியும், நைஜீரியா முன்னாள் துணை அதிபர் அட்டிக்கு இடையே போட்டி நிலவுகிறது. 

தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புஹாரி தலைமையில் பிரசார பேரணி நடைபெற்றது. அப்போது அவரது பார்ப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறிதால், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் படுகாயம் அடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT