தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் இரு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் பலி

DIN


   
பிஜப்பூர்: சத்தீஸ்கரில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் நெல்சனார் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 2 பிக்-அப் வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், அந்த வாகனங்களில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT