தற்போதைய செய்திகள்

மாமல்லபுரத்தில் பிரதமா் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி: இல.கணேசன்

DIN

 
மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் கூறினார். 

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இங்கு அக்.21 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும்,  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டனர். 

இதையடுத்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாமல்லபுரத்தில் பிரதமா் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT