தற்போதைய செய்திகள்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 குறைப்பு 

DIN

சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளையின் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2020 ஜனவரி மாதத்தில் ரூ.734 ஆக விலை உயர்ந்து காணப்பட்டது. அதிலும் பிப்ரவரி மாதம் விலை திடீரென ரூ.147 விலை அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் மாதம் ரூ.55 குறைந்து ரூ.826-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளையின் விலை ரூ.65 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது ரூ.826 ஆக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளையின் விலை ரூ.65 குறைக்கப்பட்டு ரூ.761.50-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT