தற்போதைய செய்திகள்

தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து 25 பேர் காயம்

DIN


தலைவாசல் அருகே ஆட்டோ வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக பெத்தநாயக்கன்பாளையம் டாட்டா ஏஸ் ஆட்டோவில் 25 பேர் பயணித்தனர். ஊனத்தூர் அடுத்து வேப்பனத்தம் சாலையில் பொன்னுசாமி கவுண்டர் தோட்டம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளர் கே.குமரவேல்பாண்டியன் ஓட்டுநர் மருதமுத்து (38) கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

காயம் அடைந்த அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT