தற்போதைய செய்திகள்

தாணேவில் டிச.31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை

PTI

தாணே மாவட்டத்தில் கரோனா பரவல் குறையாத நிலையில் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கரோனாவால் நாட்டிலேயே அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிரத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பள்ளிகள் நவம்பர் 23 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாணே மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2ம் அலைக்கான அச்சம் உள்ளதால், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இணையவழிக் கல்வி தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT