முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜன.27-இல் கூடுகிறது மேற்கு வங்க சட்டப்பேரவை

மேற்குவங்க சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 4:43 pm IST
ஜன.27-இல் கூடுகிறது மேற்குவங்க சட்டப்பேரவை
பகிர்:

மேற்குவங்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலுக்கு மத்தியில் மேற்குவங்க சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தை போல், அனைத்து உறுப்பினர்களுக்கும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பூசி விநியோகம், வேளாண் சட்டம், ஜி.எஸ்.டி. பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனிடையே, மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments