முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திங்கள்கிழமை மக்களின் இயல்புவாழ்ககையில் பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 9:13 pm IST
கோப்புப்படம்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திங்கள்கிழமை மக்களின் இயல்புவாழ்ககையில் பாதிப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழைப் பொழி ஏற்பட்டு வந்தது.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 33 மி.மீட்டரும், தலைஞாயிறில் 11.8 மி.மீட்டரும் மழை பதிவானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடர்ந்த கனமழை தொடர்ந்து வருகிறது. காலை 8 மணி முதல் 6 மணிவரையில் வேதாரண்யத்தில் 127.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 80 .5 மி.மீட்டரும் மழை பதிவானது.

கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சாகுபடி வயல்களில் தண்ணீர் வடியாது இருந்த நிலையில் தற்போது கொட்டி தீர்த்து வரும் மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகாராஜபுரம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தகட்டூர், மருதூர், தென்னடார் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரக உள்ள நெல் வயல்களை வெள்ள நீர் சூழ்நது, கதிர்களை பாதிக்கச்செய்துள்ளது.

நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து வருகிறது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்ததால் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் பொருள்களை வாங்கச்செல்வது பாதிக்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments