தில்லியில் ஜன.18 முதல் பள்ளிகள் திறப்பு
தில்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
தில்லியில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு அளிக்கப்பட்ட தளர்வை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தில்லி அரசு வெளியிட்ட செய்தியில்,
Advertisement
Advertisement
பள்ளிகளின் இறுதித் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 18ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு அழைக்க வேண்டும்.
பெற்றோர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு அனுப்பலாம். வருகைப் பதிவிற்காக பள்ளிக்கு வர நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.