‘கேரளத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை’: மத்திய அமைச்சர்
கேரள மாநிலத்தில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான வி.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான வி.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கேரளத்தில் அதிகரித்து வருகின்றது.
இதுகுறித்து கேரள பாஜக தலைவர் கூறியதாவது,
Advertisement
Advertisement
கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. மாநில அரசு தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை. தற்போது கரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் உள்பட பல துறைகளை அரசு திறந்து வருகின்றது. மாநில அரசு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
கேரளத்தில் இதுவரை 8,31,260 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3,392 பேர் பலியாகியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.