தற்போதைய செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் நாள்தோறும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தும் தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்நிலையில், மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் குறித்து மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

நாளை காலை மருத்துவ துறையினர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், தற்போது தலைமைச் செயலாளர் மாவட்ட நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT