மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை(மே 23) ஆலோசனை
தளர்வில்லா பொதுமுடக்கம் திங்கள் முதல் அமலாகவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தளர்வில்லா பொதுமுடக்கம் திங்கள் முதல் அமலாகவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் மே 10 முதல் சிறு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் இருந்தபோதும் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதனால் மே 24ஆம் தேதி முதல் தளர்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisement
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நாளை முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த கூட்டத்தில், முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவது, காய்கறி விநியோகம் போன்றவவை ஆலோசனை செய்யப்படவுள்ளது.