முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை!

இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 2:49 PM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 10 மணி வரை) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →