ரஞ்சனி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரஞ்சனி தொடர், நண்பர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதையாக எடுக்கப்படுகிறது.
புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடர், 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே தொடரின் மையக்கரு. இயக்குநர் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் தொடர்கிறது!.. வெளியானது முன்னோட்டக் காட்சி!
ரஞ்சனி தொடர் சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் 2 ஆம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியான நிலையில், இத்தொடர், ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இந்த நிலையில், ரஞ்சனி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.