மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...
மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது
தந்தையின்றி நான்கு மகள்களை வளர்க்கும் தாயின் கதையாகத் தொடங்கிய இந்தத் தொடரில் தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று, திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், காவியா, சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்,
Advertisement
இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தாய் மாமன் தொடர் வருகையால் மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாநதி தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.