ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!
ரஞ்சித்தின் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி தொடர்பாக...
ரஞ்சித் நடிக்கும் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அண்ணன் - தங்கை இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக, தாய் மாமன் உறவை மையப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடருக்கு தாய் மாமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாய் மாமன் தொடர் விஜயகுமார் - ராதிகா நடித்திருந்த கிழக்குச் சீமையிலே படத்தின் பாணியில் எடுக்கப்படுகிறது.
Advertisement
இந்தத் தொடரில் நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அண்ணன் பாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார். தங்கை பாத்திரத்தில் தேவி பிரியா நடிக்கிறார். இவர்களுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டம், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
மனோஜ் இயக்கும் இந்தத் தொடரை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரின் மூலம் நடிகர் ரஞ்சித் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று 70 நாள்கள் வரை இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தாய் மாமன் தொடர் மூலம் சின்ன திரையில் மீண்டும் தோன்றுகிறார் நடிகர் ரஞ்சித். கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் இந்தத் தொடரில் தாய் மாமன் பாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார்.
தாய் மாமன் தொடரின் முன்னோட்டக் காட்சிகள் இணையத்தில் வைராலான நிலையில், வரும் ஏப். 27 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.