முகப்பு
தற்போதைய செய்திகள்

மீன் தாக்கிய மீனவா் மருத்துவமனையில் அனுமதி

வேதாரண்யத்துக்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நச்சுத் தன்மையுடைய மீன் தாக்கியதில் மீனவா் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 24 டிசம்பர் 2024, 1:56 am IST
ராஜ்குமாா்.
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யத்துக்கு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நச்சுத் தன்மையுடைய மீன் தாக்கியதில் மீனவா் ஒருவா் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) உள்ளிட்ட ஐந்து மீனவா்கள் ஒரு படகில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனா்.

இவா்கள், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வளையில் சிக்கிய சொறி என்ற மீன் ராஜ்குமாரைத் தாக்கியுள்ளது. இதில் மயக்கமடைந்த ராஜ்குமாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

ஆழ்கடல் பகுதியில் காணப்படும் சொறி என்ற ஒரு வகையான மீன் நச்சுத்தன்மை அதிகம் உடையது. இந்த மீன் முள்ளால் குத்தினாலும் சிலரது உடலுக்கு ஒவ்வாமை அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments