மக்களவை உறுப்பினராக பதயேற்கும் பிரியங்கா காந்தி. படம்: சன்சத் டிவி
தற்போதைய செய்திகள்

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி பதவியேற்பு.

DIN

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக இன்று(நவ. 28) பதவியேற்றார். பிரியங்கா காந்திக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.பி.,யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி. கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து, இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்திவாறு பதவியேற்றுக்கொண்டார்.

அவர் பதவியேற்பதற்கு முன்னதாக, மக்களவைக்குள் நுழையும் முன்பே காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியைத் தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கட்சியின் பொதுச் செயலஎ பிரியங்கா காந்தி, 4.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார் நிலையில், இன்று வயநாடு தொகுதி எம்பியாக பதிவியேற்றார்.

பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாகப் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT