முகப்பு
தற்போதைய செய்திகள்

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம்.

Updated On : 16 செப்டம்பர் 2024, 7:23 pm IST
கோப்புப்படம் - Din
பகிர்:

விழுப்புரம்: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது. இந்த கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக 2 சிறப்பு ரயில்கள் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

விழுப்புரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.17) காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06130) முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இதுபோல, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண்.06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் புதன்கிழமை (செப்.18) அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments