முகப்பு
தற்போதைய செய்திகள்

ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோ.வி. செழியன் தெரிவித்தார்.

Updated On : 12 ஜூன், 2025 at 8:01 AM
உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன்
பகிர்:

தஞ்சாவூர்: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.

முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

பலூனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பறக்கவிட்டார்.

முதல்வரை வரவேற்கும் வகையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பறக்கவிடப்பட்டுள்ள முதல்வர், துணைமுதல்வர் உருவம் பொறித்த ராட்சத பலூன்

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 5 பேர் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்க்கல்வியில் இடை நிறுத்தம் இல்லாமல் கல்வியைத் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேட்டூர் அணையில் இன்று திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை எளிதாக செல்லவதற்காக ஏ மற்றும் பி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன.

மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக போதியளவு கையிறுப்பு உள்ளதாக அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →