முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 18 ஜூன் 2025, 9:22 am IST
ஒட்டன்சத்திரம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள்.
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா(28) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் காளீஸ்வரியுடன் பவித்ரா வசித்து வந்தார்.

Advertisement

இந்த நிலையில், பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபருடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மாலை 6 மணியளவில் பவித்ரா வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால், அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், அவரது மகள் காளீஸ்வரி ஆகிய இருவரும் பேத்திகளான லித்திக்ஸா(7), தீப்தி (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என சந்தேகிக்கிப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இடையகோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.