கோப்புப் படம்  ஏபி
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!

இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானதைப் பற்றி...

DIN

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் அப்தெல்-லத்தீஃப் அல்-குவானோவா என்பவர் தங்கியிருந்த முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் பலியானதாக ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் செய்தி தொடர்பாளர் பஸெம் நயிம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், காஸா பகுதியின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர் பலியானதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்ததை முறித்து இஸ்ரேல் ராணுவம் காஸாவின் மீது நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் படையிடம் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கப்படவில்லை என்றால் இந்தத் தாக்குதலானது மேலும் அதிகரிக்கக் கூடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இருப்பினும், ஹமாஸ் தரப்பில் தங்களிடம் மீதமுள்ள 59 பிணைக் கைதிகள் இஸ்ரேல் படைகள் காஸாவை விட்டு வெளியேறி போர் நிறுத்தம் நீடித்தால் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் 24 பேர் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு! 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிழைகள்! சரிசெய்து வழங்க ஓம் பிர்லா அறிவுரை!

ராகுல் எந்த உலகில் வாழ்கிறார் தெரியவில்லை: ஓம் பிர்லா விவகாரத்தில் கிரண் ரிஜிஜு

கிரீன் டீ குடிப்பது நல்லதா? 2 வாரங்கள் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்! மத்திய அரசு உத்தரவு

சுகாவின் சைலப்பன் சைக்கிள் மார்ட் போஸ்டர்!

SCROLL FOR NEXT