முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு தொடர்பாக...

Updated On : 1 நவம்பர் 2025, 1:06 pm IST
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

Advertisement

Advertisement

போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்...! என முதல்வர் தெரிவித்துள்ளார்.

summary

We will protect the rights of Tamil Nadu: Chief Minister M.K. Stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.