போராட்டக்காரர்கள் தீயிட்டதில் தீக்கிரையான காவல் துறை வாகனங்கள் PTI
தற்போதைய செய்திகள்

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரண வழக்கில் கைதானவர்கள் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டபோது வெடித்த கலவரம்...

இணையதளச் செய்திப் பிரிவு

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை வேறு காவல் நிலையத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது.

காவல் துறையினரின் வாகனத்திற்கு தீயிட்ட போராட்டக்காரர்கள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என பலர் படுகாயம் அடைந்தனர்.

அஸ்ஸாமின் பக்சா மாவட்டத்திற்குட்பட்ட முஷால்பூர் பகுதியில் நடந்த இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க முயன்றனர்.

ஸுபீன் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் இன்று நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால், புதிதாக கட்டப்பட்ட பக்சா மாவட்டத்தின் சிறைச்சாலைக்கு காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றபோது, போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டவர்களை பாதுகாப்பதில் காவல் துறை கவனம் செலுத்தியது.

பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டி சிறையில் இருந்து புதிதாகவும் பாதுகாப்பு அம்சங்களுடனும் கட்டப்பட்டுள்ள பக்சா சிறைக்கு கைது செய்யப்பட்டவர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஜூன் 21ஆம் தேதி இந்த சிறைச்சாலையை ஹிமந்த பிஸ்வ சர்மா திறந்து வைத்தார்.

ஸுபீன் மரண வழக்கில் கைதானவர்கள் இந்த சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்தக் காவல் நிலையத்தின் முன்பு ஸுபீன் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பக்சா மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க | மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

Zubeen's case: Protesters torch vehicles carrying accused to jail ; several including police, journalists injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1-க்கு புதிய ப்ரீபெய்டு திட்டம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

275 மாநகர சிறப்பு பேருந்துகள்: இன்றுமுதல் இயக்கப்படும்

பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு

கொளத்தூரில் ரூ.110.92 கோடியில் அதிநவீன துணை மின்நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மோட்டாா் பைக் விபத்தில் மெக்கானிக் காயம்!

SCROLL FOR NEXT