நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!
மின் நுகர் முன்னெப்போதும் இல்லாத அளவுகளுக்கு உயர்ந்த நிலையில், நாட்டின் உச்சபட்ச மின் தேவை சனிக்கிழமை 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம் குறித்து...
புது தில்லி: வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக, வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்தது; இது மின் நுகர் முன்னெப்போதும் இல்லாத அளவுகளுக்கு உயர்ந்த நிலையில், நாட்டின் உச்சபட்ச மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாள்தோறும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகள், அலுவலகங்களில் குளிா்சாதன இயந்திரங்கள் (ஏசி), கூலா்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால் மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நாட்டில் உச்சபட்ச மின் தேவை 252.07 ஜிகாவாட்டாக உயா்ந்தது; இது 2024 மே மாதத்தில் பதிவான முந்தைய உச்சபட்ச மின் தேவை அளவான 251 ஜிகாவாட்டை முறியடித்தது. சனிக்கிழமை பிற்பகல் 3.38 மணியளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 256.11 ஜிகாவாட்டாக அதிகரித்தது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisement
இந்தக் கோடை காலத்தில் மின் தேவை 270 ஜிகாவாட்டாக அதிகரிக்கக் கூடும் என்றும், அதை நோக்கி மின் தேவை நகா்ந்து வருவதாகவும்; இது வரும் வாரங்களில் நாட்டின் மின் விநியோக அமைப்பிற்குப் பெரும் சவாலாக அமையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காலகட்டத்திற்கு வழக்கத்திற்கு மாறாக, இதுவரை எட்டப்பட்டுள்ள உச்சபட்ச மின் தேவை அளவுகள் மிக அதிகமாக உள்ளன. இத்தகைய அதிகப்படியான மின் தேவை பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில், கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கியதே மின் தேவையில் ஏற்பட்ட இந்தத் திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.