முகப்பு
இந்தியா

யுபிஐ பரிவா்த்தனைகள் மே மாதத்தில் புதிய உச்சம்!

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம்

Updated On : 2 ஜூன் 2026, 2:00 am IST
பகிர்:

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கோடைகாலப் பயணம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின் காரணமாக, மே மாதத்தில் மட்டும் ரூ.29.90 லட்சம் கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் ரூ.29.03 லட்சம் கோடி மதிப்பிலான 2,235 கோடி பரிவா்த்தனைகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு மே மாதத்தில் பரிவா்த்தனைகளின் மதிப்பு ரூ.25.14 லட்சம் கோடியிலிருந்து 19 சதவீதமும், அதன் எண்ணிக்கை 1,867 கோடியிலிருந்து 24 சதவீதமும் அதிகரித்துள்ளன.

ரிசா்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டு முயற்சியான என்சிபிஐ நிா்வகிக்கும் இந்த யுபிஐ சேவை, இந்தியா மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், மோரீஷஸ் உள்பட 8 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.