முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து...

Updated On : 28 ஏப்ரல், 2026 at 10:02 PM
நரேந்திர மோடியின் படத்துடன் சிறுமி - பிடிஐ
பகிர்:

குஜராத்துக்கும் பாஜகவுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுவடைவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 28) தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:

''குஜராத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான உறவு, தற்போது மேலும் ஆழமானதாகவும் முறியடிக்க முடியாததாகவும் மாறியுள்ளது!

Advertisement

மாநிலம் முழுவதும் நடைபெற்ற மாநகராட்சி, நகராட்சி, தாலுகா பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களில், பாஜகவுக்கு கிடைத்திருக்கும் மகத்தான மக்கள் ஆதரவிற்கு மக்களிடம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில அரசின் வளர்ச்சிப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், நல்லாட்சி அரசியலின் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பாஜக மேற்கொண்டு வரும் அயராத முயற்சிகளுக்கு, பொதுமக்கள் தங்கள் உளமார்ந்த நல்வாழ்த்துகளை வழங்கியுள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

வரும் காலங்களில், நாங்கள் இன்னும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பணியாற்றுவோம் என்றும் மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்லத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் குஜராத் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்'' என மோடி பதிவிட்டுள்ளார்.

summary

Bond between Gujarat and BJP gets stronger PM Modi hails BJP's clean sweep in Gujarat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.