கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!
மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் தொடர்பாக...
மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக இன்று(ஏப். 28) நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை நடைபெற்றது.
வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுரவர் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் பல வண்ண மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.
திருக்கல்யாணம் முடிந்தவுடன் பெண்கள் தங்களது மாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டு வழிபட்டனர்.