மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் ஆய்வு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டது பற்றி..
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ரமேஷ் அவரது போனை பாதுகாப்பறையில் வைத்து விட்டு கோயிலுக்குள் சென்றார்.
கோயிலுக்குள் சென்ற அமைச்சர் ரமேஷ், பிரசாதம் தயாரிக்கும் இடம், பக்தர்கள் செல்லும் வரிசை, கூட்ட மேலாண்மை, கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு பணிகள், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதற்காக, இன்று நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தோம்.
90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. 10 சதவீத பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், குடமுழுக்குக்கு முன்னதாக யாக சாலை பூஜை வளர்ப்பது, உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக வெளியிடப்படும்.
ஒட்டுமொத்தமாக கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் களையப்படும். இவ்வாறு அவர் கூறினார்.