மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்
மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என பிரதமர் கூறியிருப்பது...
புதுதில்லி: மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
Advertisement
முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்தத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தென் மாவட்டங்கள் மீதான தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கான கதவுகளைத் திறக்குமா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது.
இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்
இந்த நிலையில், புதன்கிழமை(ஏப்.29) நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மேற்கு வங்க மக்கள் "சாதனை அளவில்" வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, பெண்களும் இளைஞர்களும் அதிகயளவில் வாக்களித்து, தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்திக்கொள்ளவது மிகவும் முக்கியமானது என று மோடி வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்கெடுப்பில், 142 தொகுதிகளில் களத்தில் உள்ள 1,448 வேட்பாளர்களில் 1,228 பேர் ஆண்கள், 220 பேர் பெண்கள்.
இவர்களது அரசியல் விதியை 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3.21 கோடி போ் தீர்மானிக்க உள்ளனர்.