முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க மக்கள் அதிகளவில் பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர்: சி. வி. ஆனந்த போஸ்

மேற்கு வங்க மக்கள் எனக்கு அதிகளவில் பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர் என சி.வி. ஆனந்த போஸ் கூறியது குறித்து...

Updated On : 11 மார்ச், 2026 at 3:12 PM
மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஆனந்த போஸ் - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்க மக்கள் எனக்கு அதிகளவில் பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர் என முன்னாள் ஆளுநர் சி. வி. ஆனந்த போஸ் தெரிவித்தார்.

மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி. வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 ஆம் தேதி ராஜிநாமா செய்தார். அவர் ராஜிநாமா செய்ததையடுத்து தமிழகத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார்.

மேற்கு வங்க மக்கள் குறித்து சி. வி. ஆனந்த போஸ், வங்காள மக்கள் எனக்கு அதிகளவிலான பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர். அதை நான் நன்றாக உணர்கிறேன் எனக் கூறினார்.

Advertisement

தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு ஒரு செய்தியை வழங்குமாறு கேட்டபோது, “நாம் அனைவரும் தேர்தலில் பங்கேற்க வேண்டும். வாக்களிப்பதைத் தவறவிடக்கூடாது. வாக்களிப்பதற்கு முன் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருக்கும் நிலையில், புதன்கிழமை (மார்ச் 11) காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

summary

Former Governor C.V. Ananda Bose said that the people of West Bengal have given me immense affection and cooperation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.