திருமலையில் கூட்ட நெரிசல்: திருமலையில் பக்தர்களுக்கு விரிவான மருத்துவ சேவைகள்!
கோடை விடுமுறை கூட்ட நெரிசல் அடுத்து திருமலையில் பக்தர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருது குறித்து...
கோடை விடுமுறை கூட்ட நெரிசல் அடுத்து திருமலையில் பக்தர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
கோடை விடுமுறையை ஒட்டி திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்களுக்குச் சிறந்த மருத்துவ மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன்படி, பட்டகங்கம்மா வளைவு முதல் கோகர்ப்பம் அணை வளைவு வரையிலும், வெளிவட்டச் சாலை நெடுகிலும் நிழல் தரும் பந்தல்களை அமைப்பது உள்ளிட்ட, ரூ.2 கோடி மதிப்பிலான பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement
வைகுண்டம் வரிசை வளாகம்-2, அருங்காட்சியக வளாகம் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் கூடுதல் நிழல் பந்தல்கள், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், வரிசைப் பாதைகளிலும் நான்கு மாட வீதிகளிலும் வெப்பத்தைத் தணிக்கும் சிறப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. குடிநீரைத் தடையின்றி விநியோகிப்பதற்காகச் சுகாதாரத் துறை தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
மேலும், வரிசைப் பாதைகளிலும் பொது இடங்களிலும் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 16 மருத்துவ மையங்களும், வரிசைப் பாதைகள் மற்றும் நாராயணகிரி பூங்கா ஆகிய இடங்களில் நடமாடும் முதலுதவிப் பிரிவுகளும் பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
the heavy summer vacation rush, the Tirumala Tirupati Devasthanams (TTD) has made extensive arrangements to provide better facilities for pilgrims...