சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! ஐடி, ஆட்டோ துறை பங்குகள் இறக்கம்!
ஐடி, ஆட்டோ துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்றைய வணிக நாளின் (மே 7) முடிவில் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகளும் நிஃப்டி 24,326 புள்ளிகளுடனும் நிறைவு பெற்றது. ஐடி, ஆட்டோ துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77,942 புள்ளிகளுடன் தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 78,384.70 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து வணிக நேர முடிவில் 114 புள்ளிகள் சரிந்து 77,952 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. ஒட்டுமொத்த இன்றைய வணிகத்தில் இது 0.15% சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24,398 புள்ளிகளுடன் தொடங்கியது. வணிக நேர மத்தியில் அதிகபட்சமாக 24,482 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து 24,330 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது. இன்றைய ஒட்டுமொத்த வணிகத்தில் இது 0.018% சரிவாகும்.
Advertisement
சென்செக்ஸ் பட்டியலில் மொத்தம் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.