முகப்பு
லைஃப்ஸ்டைல்

பாட்டி வைத்தியம்...

துளசி விதை நரம்பு பிரச்னைகளைக் குணமாக்கும்.

Updated On : 31 மே 2026, 1:24 pm IST
பகிர்:

* துளசி விதை நரம்பு பிரச்னைகளைக் குணமாக்கும்.

* தேள் கொட்டிவிட்டால் எருக்கம்பாலை கடிவாயில் வைத்தாலும் வலி குறையும்.

* இஞ்சியை சாறாக்கிக் குடித்தால் மயக்கம், வாய்வு போன்ற தொல்லைகள் குறையும்.

Advertisement

Advertisement

* வயிறு உப்புசமாக இருந்தால், இரண்டு தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் சரியாகிவிடும்.

* குழந்தைகளுக்கு சூப் தயார் செய்யும்போது, அதில் ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவை கலந்திடுங்கள். உடல் வலிமை பெறும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

இளநீரின் பயன்...

* நாம் அருந்தும் பானங்களில் இளநீர் சுத்தமானதும் சத்து நிறைந்ததுமாகும்.

* இந்தியாவில் விளையும் தென்னைகளில் 'கொச்சின் சைனா' என்ற ரகம் சிறப்பானது. அதன் இளநீர் மிகவும் சுவையானது.

* கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் போதும், சிறுநீர் தாராளமாகப் போகும்.

* வெப்பத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இளநீருக்கு உண்டு.

* சிறுநீரகக் கற்கள் உருவாவதை இளநீர் தடுக்கிறது. சிறுநீரகத் தொற்றுகளைக் குறைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.