வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் துளசி சேகரன் (43). இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு வையம்பட்டி காவல்நிலையத்துக்கு சென்றிருந்தாா்.
அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலா் காமராஜை, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மிரட்டியதாகவும் துளசி சேகரன் மீது புகாா் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதன்பேரில், வையம்பட்டி காவல்நிலையத்தில் துளசி சேகரன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ட்டது.
இந்த வழக்கு விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சுமத்தப்பட்ட துளசி சேகரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில், சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த அரசுத் தரப்பு வழக்குரைஞா் மற்றும் போலீஸாருக்கு திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளாா்.