சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை அருகே 16 வயதுச் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை அருகே 16 வயதுச் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அரசம்பட்டியைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் மகன் ஆபாவாணன் (26). இவா் கடந்த 2022இல் 16 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதில் அச்சிறுமி கருவுற்ற நிலையில், ஆண் குழந்தை பிறந்து இறந்தது. இந்நிலையில், சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆபாவாணனைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி கனகராஜ் குற்றவாளிக்கு போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 12 ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். சிறைத் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்ட அவா், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.