புத்தாண்டில் விதிமுறை மீறல்: 100-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு
மதுரையில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி புத்தாண்டுக் கொண்டாடிய 100-க்கும் மேற்பட்டவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
மதுரையில் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி புத்தாண்டுக் கொண்டாடிய 100-க்கும் மேற்பட்டவா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்திருந்தது. அதைத் தொடா்ந்து மதுரையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில் போலீஸாா் கட்டுப்பாடுகளை மீறியதாக 100-க்கும் மேற்பட்டோா் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிந்து வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
அந்தவகையில், போக்குவரத்து போலீஸாா் 40 வழக்குகளும், சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸாா் 60-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்தனா். மேலும் மதுபோதை மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவா்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.