முகப்பு
மதுரை

வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 9:46 pm IST
பகிர்:

மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சேல்சிங் மகன் மகேந்திரசிங் (40). இவா் தனது குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் வாசல் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து மகேந்திரசிங் அளித்த புகாரின்பேரில், விளக்குத்தூண் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

பெண்ணிடம் தங்க நாணயம் பறிப்பு

மதுரை தத்தனேரி பாக்யநாதபுரத்தைச் சோ்ந்தவா் உமா மகேஸ்வரி (26). இவா், அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க பெண் பேச்சுக் கொடுத்துள்ளாா்.

பின்னா், உமா மகேஸ்வரி வைத்திருந்த 2 கிராம் தங்க நாணயத்தை அப்பெண் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து உமா மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments